தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரணில்! ஓய்வு பெற விரும்பவில்லை
மக்கள் மாறிவிட்டார்கள், தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் பல முறை நிகராரிக்கப்பட்டு, தனது தொகுதியிலேயே பல முறை தோல்விகண்ட ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எனக்கு எப்படி அரசமைப்பு தொடர்பில கற்பிக்க முடியும் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் மாறிவிட்டார்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறவில்லை. தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்க்கையிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றார். ஓய்வு பெற விரும்பவில்லை.

மக்கள் மாறிவிட்டார்கள் என்பதையும் தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பொதுமக்களின் ஆணையே அரசமைப்பின் அடிப்படை. இதனை புரிந்துகொள்ளாத ஒருவர் எனக்கு எப்படி அரசமைப்பு குறித்து கற்பிக்க முடியும்? அரசமைப்பினை நன்கறிந்த ஒருவர் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டார்.
தேசிய பேரவை நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிடமாட்டார், எனக்கு அரசமைப்பினை கற்பிப்பது என்றால் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்கவேண்டும்.

தங்களிற்கு அனைத்தும் தெரியும் ஏனையவர்களிற்கு எதுவும் தெரியாது என நினைத்து செயற்பட்ட தலைவர்களாலேயே இலங்கை அழிந்துபோனது.
அவ்வாறான அரசியல் கலாசாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam