தாய்வான் விவகாரத்தில் மோதல் வெடிக்கலாம்: மூடிய பேச்சுவார்த்தையில் ட்ரம்பிற்கு சீனா எச்சரிக்கை
சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இடையிலான உயர்மட்ட சந்திப்பு பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ஷீ ஜின்பிங், அதே வேளையில் தாய்வான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்றும், இது நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
தீவிரமடையும் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் சந்திப்பு
2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த மூடிய கதவுப்பேச்சுவார்த்தையில், ஈரான் போரினால் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்தும், அமெரிக்காவிலிருந்து சீனா மசகு எண்ணெய் மற்றும் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, போயிங் நிறுவனத்திடமிருந்து சீனா பெரிய அளவில் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், என்விடியா மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் ட்ரம்புடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதற்குச் சீனா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இரு வல்லரசு நாடுகளும் மோதிக்கொள்ளும் சூழல்
தாய்வான் விவகாரமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான விஷயம் என்றும், இதைச் சரியாகக் கையாளத் தவறினால் இரு வல்லரசு நாடுகளும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் ஷீ ஜின்பிங் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில் தாய்வான் குறித்த குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை; மாறாக வர்த்தகம் மற்றும் ஈரான் போர் விவகாரங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.

உள்நாட்டில் ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் சரிந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றுக்கு மத்தியில், பொருளாதார ரீதியான வெற்றிகளைத் தேடி ட்ரம்ப் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், சீனாவிடமிருந்து பெரிய அளவிலான முதலீடுகளைப் பெறவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, வரும் செப்டெம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கிற்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam