வடக்கு கடற்பரப்பில் நீடிக்கும் மோதல் - மீனவர்களிடையே பெரும் பதற்றம் (VIDEO)
இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மோதல் நீடித்துள்ளது.
அத்துமீறி எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும் எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த பிரச்சினைக்கு முடிவு காணும் நோக்கில் இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வடக்கு கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதல் நேற்று இரவு உச்சம் தொட்ட நிலையில், இந்திய மீனவர்கள் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும், மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மீனவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்...