வடக்கில் மேலும் 29 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கும், கிளிநொச்சி,முல்லைத்தீவில் தலா ஒருவரும் என மொத்தம் 29 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 320 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டன.
அவற்றில் 7 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 755 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, 22 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 57 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இவர்களில் 7 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்களில் 2 பேர் திருநெல்வேலி பொதுச் சந்தைதொகுதியைச் சேர்ந்தவர்கள். யாழ். பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவபீட மாணவன் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.
அதேவேளை, திருநெல்வேலி சந்தை தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடைய இருவருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது.
இவர்கள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 6 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவுக்கு வந்த ஒருவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் உறுதிப்படுத்தப்பட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட் நோய்த்தொற்று பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
கிளிநொச்சியிலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதியில் 800 இற்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக கொழும்பு முல்லேரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அவரின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
