இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ம் சரத்தினை உறுதிசெய்க: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு - கிழக்குப் பகுதி தமிழர்களின் தாயகம் என்பதனை உறுதி செய்தே, இலங்கைக்கான உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வமாகச் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவின் உதவிகளை உறுதிப்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார முதலீட்டு முயற்சிகள், மீனவர்கள் விவகாரம், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தல் உட்படப் பல விடயங்கள் பேசப்பட இருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி, மருத்துவ தேவைகள் உட்பட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான இந்தியாவின் உதவிகள் இந்தியத் தேசத்தின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
குறிப்பாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ம் சரத்தில் உறுதி செய்யப்பட்ட இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதியில், இடம்பெற்று வரும் நில அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள், ஒப்பந்தத்தின் அச்சரத்தினை அழித்து வருவதாக அமைகின்றது.
இந்நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் உதவி வழங்கள் என்பது இந்திய - இலங்கை
ஒப்பந்தத்தின் 1.4ம் சரத்தினை உறுதி செய்தே வழங்கப்பட வேண்டும் என கோருகின்றோம் என்றுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
