சிறுமி ஆயிஷாவை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் இன்று வழங்கப் போகும் வாக்குமூலம்
பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
சந்தேகநபரை நேற்று பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேக நபரின் தனிப்பட்ட கோரிக்கை

எனினும், சந்தேகநபர் தனிப்பட்ட முறையில் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி கோரியதையடுத்து, மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் இன்று வாக்குமூலம் வழங்குவதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி, சந்தேகநபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
விசேட பாதுகாப்பின் கீழ் சந்தேகநபர்

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு வழங்கிய சமர்ப்பணங்களை அடுத்து சந்தேக நபரை விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை எனவும், சம்பவத்தின்போது சிறுமி ஆயிஷா அணிந்திருந்த ஆடை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri