கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்கு ஒரு கட்சி சார்ந்தவர்களை நியமனம் செய்வதை கண்டிக்கின்றோம்: சி. சிறீதரன் (video)
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்கு எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி நியமன அடிப்படையில் ஒரு கட்சி சார்ந்தவர்களை நியமனம் செய்வதையும் கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு நேற்று (03.02.2023) விஜயம் மேற்கொண்ட போது ஊடகங்களுக்கு இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர்.
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்கு எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி நியமன அடிப்படையில் ஒரு கட்சி சார்ந்தவர்களை நியமனம் செய்வதை கண்டிகின்றோம்.
இதேவேளை தேர்தலைகளை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று பார்த்தால், இங்கே நடக்கின்ற உள்ளூர் ஜனநாயக அமைப்புக்களான கூட்டுறவு சங்கங்கள் கூட்டுறவு சங்க நிதியிலே இலகுவாக தேர்தல்கள் நடத்துகின்றன.
அரச கட்சி சார்ந்தவர்கள்
இவ்வாறு தேர்தல்களை நடத்தி தற்செயலாக அதில் யாரும் வெற்றி பெற்றிருந்தால் அது தங்களுடைய கட்சிகளுக்கு தொடர்பில்லை அல்லது அவர்கள் தங்களுடைய கட்சிக்கு சார்பானவர்கள் இல்லை என்றால் அதையும் தடுத்து நிறுத்தி அரச கட்சி சார்ந்தவர்கள் அதாவது அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள் இந்த ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.
அவ்வாறான ஒரு விடயம்தான் வடமராட்சி கிழக்கிலே நடைபெற்றிருப்பது. ஆகவே இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நாங்கள் இது தொடர்பாக பல இடங்களிலே பல தடவைகள் குறிப்பிட்டிருக்கின்றோம்.
நான் நினைக்கின்றேன் கூட்டுறவு ஆணையாளர் இதிலே ஒரு தெளிவான முறையோடும், தெளிவான நடவடிக்கையோடும் செயற்பட வேண்டும்.
ஜனநாயக முறை
இல்லையானால் சட்ட பூர்வமான நடவடிக்கைகளுக்கும் எதிர்கலாத்தில் நடந்து கொண்டது பிழை என்பதற்க்கான காரணங்களை நிரூபிக்கக்கூடிய தேவைகளும் ஏற்படலாம்.
ஆகவே இது ஒரு ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டிய தெரிவுகள், ஜனநாயக முறைப்படியான தெரிவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்க்கு உடன்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.




