வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்தல்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய சுகாதார வழிகாட்டலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமைபெற்றவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகள் என வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாகினும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும்.
இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு முதல் நாள் வருகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் PCR சோதனையிலிருந்து வெளியேறலாம்.
இந்த புதிய அறிவிப்பு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்
இலங்கை மற்றும் பிற நாடுகளின் எதிர்கால கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
