சுதந்திரபுரம் தங்கம் அகழ்வு பணி நிறைவு: அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணி நிறைவிற்குக் கொண்டுவந்துள்ளதுடன், இரண்டு குழிகளையும் தோண்டியவர்கள் யார் என்று அது தொடர்பில் நீதிமன்ற விசாரணை செய்து மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டு உத்தரவிற்கமைய தோண்டும் நடவடிக்கைகள் கடந்த 03.12.21 திகதி தொடக்கி வைக்கப்பட்டது.
குறித்த அகழ்வு நடவடிக்கை 04.12.21 ஆம் திகதியும் மேற்கொள்ளப்பட்டு இயந்திரங்கள் புதைந்த காரணத்தினால் 06.12.21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், படையினர், சிறப்பு அதிரடிப்படையினர்,மருத்துவமனை நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்கள் குறித்த பகுதிக்குப் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்நிலையில் தோண்டப்பட்ட கிடங்குகளில் தண்ணீர் நிரம்பிக் காணப்படுவதால் தண்ணீரினை இறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுத் தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு சுமார் பத்து அடி ஆழம் வரையில் தோண்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் மாலை 5.15 மணியளவில் அகழ்வு பணியினை நீதவான் நீதிமன்ற நீதிபதி நிறைவிற்குக் கொண்டு வந்துள்ளதுடன், இதன்போது எடுக்கப்பட்ட சில சான்று பொருட்களை மன்றில் பாரப்படுத்துமாறும் இரண்டு குழிகளையும் தோண்டியவர்கள் யார் என்று புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணை செய்து மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இது குறித்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பாக்கியலட்சுமியில் ராதிகாவிற்கு தெரியவரும் கோபி பற்றிய உண்மை- யார் சொன்னது தெரியுமா, பரபரப்பான புரொமோ Cineulagam

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022