உடனடி பொது முடக்கத்திற்கு தயாராகிறதா இலங்கை? தீவிரமாக ஆராயும் அரச உயர்மட்டம்
கோவிட் தீவிரத்திற்கு மத்தியில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா திரிபு இலங்கையில் பல பிரதேசங்களில் பரவியிருக்கலாமென அஞ்சப்படுவதால் உடனடி பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அறியமுடிவதாக தமிழ் பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரச உயர்மட்டததில் இன்று விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது இந்த விடயம் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதன் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் டெல்டா திரிபு என்ற சந்தேகத்தில் பல கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாதிருக்கும் நோக்கத்தில் இவ்வாறு பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிய முடிந்துள்ளது.
மேலும் தற்போதுள்ள தரவுகளை கொண்டு நாட்டின் கோவிட் நிலைமைகளை மூடி மறைக்க நினைத்தாலும் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டின் உண்மையான நிலைமை என்னவென்பது வெளிப்பத்தான் போகின்றதென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam