யாழில் பாடசாலை மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது
யாழ். தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இன்று(16.07.2023) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் மாணவியை பாடசாலையில் வைத்து கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.
மனித உரிமை ஆணைக்குழு விசாரணை
இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாணவி தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினாவியபோது, தாம் அதிபரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நாளை திங்கட்கிழமை (17) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அதிபரை முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
