தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்வைத்துள்ள முறைப்பாடு
நாடு முழுவதும் கடந்த மே 09 ஆம் திகதி வன்முறை வெடித்த போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையோ இழப்பீடுகளோ கிடைக்கவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் வன்முறை வெடித்த போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையோ இழப்பீடுகளோ கிடைக்கவில்லை.
முறைப்பாடு
இது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்டுள்ளனர். இந்த வன்முறையின் போது 50 பேருந்துகள் வரை எரியூட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பில், காவல்துறையிடம் முறையிட்டபோதும், நியாயம் கிடைக்கவில்லை. இதனையடுத்தே சர்வதேசத்திடம் முறையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வன்முறை சம்பவங்கள்
கடந்தமே 09 அன்று இலங்கை முழுவதும் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டன.
இதன்போது, தாக்குதல் நடத்தியவர்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேருந்துகள் ஆத்திரமடைந்த குழுவினரால் தீயூட்டப்பட்டன.
பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன. அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை.”என கூறியுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
