வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு குறித்து வெளியான அறிவிப்பு
வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இழப்பீடு வழங்கும் பணி இன்று(29) முதல் ஆரம்பமாகும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
இந்த இழப்பீடு, பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 13,376 ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு
இதேவேளை 6,234 விவசாயிகளுக்கு 166.7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, வெள்ளத்தால் விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri