ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கும் செய்தியாளருக்கும் இடையே தீவிர கருத்துப்பரிமாற்றம்
இலங்கையின் சுகாதார அதிகாரி கூறிய கருத்துக்கள் தொடர்பாக இன்று மாலை ஒரு ட்விட்டர் தளத்தில் ஒரு செய்தியாளருக்கும் அரசியல்வாதி ஒருவருக்கும் இடையே தீவிரமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம மற்றும் செய்தியாளர் மரியான் டேவிட் இடையே இந்த தீவிர கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
ட்விட்டர் தளத்தின் ஊடக நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து ஏற்பாடு செய்திருந்தது.
இதில் நான்கு செய்தியாளர்கள் விருந்தினர் பேச்சாளர்களாக பங்கேற்றனர். கலந்துரையாடலின் போது சமீபத்தில் ஒரு சுகாதார அதிகாரி கூறிய கருத்துக்கள் குறித்து ஊடகங்களின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பினார்.
{9LDAV}
சுகாதார அமைச்சின் பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு பிரிவின் பணிப்பாளர்
ஹேமந்த ஹேரத் கூறிய கருத்துக்கள் குறித்து பெரும்பாலான ஊடகங்கள் ஏன் அறிக்கை
செய்யவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த காலத்தில் கொல்லப்பட்ட சில ஊடகவியலாளர்கள் மூன்றாம் வகுப்பு ஊடகவியலாளர்கள் என்று ஒரு ஊடக மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் ஹேரத்தின் கருத்து தொடர்பில் இந்த கேள்வி தொடுக்கப்பட்டது.
இதன்போது சில ஊடக நிறுவனங்கள் இந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தியதாக சில
செய்தியாளர்கள் பதிலளித்தனர்.
இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட்ட எதிர்க்கட்சிகளின் மௌனம்
தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இருப்பினும், கொல்லப்பட்ட செய்தியாளர் லசந்த விக்ரமதுங்க மூன்றாம் தர செய்தியாளர் என்பதை சுகாதார அதிகாரி சுட்டிக்காட்டுவதாக தோன்றியபோதும் அமைதியாக இருந்ததாகக் கூறி ஜெயவிக்ரம தொடர்ந்து செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்கள் மற்றும் ஜெயவிக்ரம இருவரும் இந்த விவகாரத்தை தொடர்ந்து விவாதித்ததால், ட்விட்டர் தளத்தில் செவிமடுப்பவராக இருந்த மரியான் டேவிட் இந்த விவாதத்தில் இணைந்தார்.
சண்டே லீடரில் விக்ரமதுங்கவுடன் பணிபுரிந்த மரியான் டேவிட், ஜெயவிக்ரம கூறிய கருத்துக்களை கண்டித்தார். அத்துடன் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் இருந்தபோதும், லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணை குறித்து அவரது கட்சித் தலைவர் மௌனம் சாதித்தமைக் குறித்து கேள்வி மரியான் டேவிட் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் நிகழ்வு மதிப்பீட்டாளர் தலையிட்டு அமர்வை முடிப்பதற்குள் இரண்டு
தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றன.