காலி சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய குழு
காலி சிறைச்சாலைகள் பிரதி அத்தியட்சகர் தலைமையில் விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மோதல்
இதேவேளை, காலி சிறைச்சாலைகளின் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் (26) காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குவாதம்
கைதிகளுக்கிடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan