மட்டக்களப்பில் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட குழு கூட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) - கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் விவசாய சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விசேட குழுக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான ஹாபிஸ் நசீர் அஹமடின் பங்கு பற்றுதலுடனும் பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் இன்று (09.05.2024) நடைபெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் மர அரி ஆலைகள், நெல் ஆலைகள் என்பவற்றை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கடதாசி ஆலை காணிக்குள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்காலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான எம்.ரியாஸ், எம்.ருவைத், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் எம்.சஹாப்தீன்,கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் விவசாய அமைப்பினர், அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.