வெளிநாட்டு நிவாரணங்களை நிர்வகிக்க விசேட குழு
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க பெறும் வெளிநாட்டு உதவிகளை முறையாக நிர்வகிக்க துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண்மை தொடர்பான ஜனாதிபதி குழு கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
உதவிகளை பதிய தரவுத் தளம்
நாட்டிற்கு கிடைக்கும் அனைத்து உதவிகளையும் ஒரு தரவுத்தளத்தில் முறையாக உள்ளிடுவது மற்றும் பொருத்தமான நபருக்கு வழங்குவது போன்ற பிரச்சினைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வழங்கப்படும் வெளிநாட்டு உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு தொடர்புடைய குழுக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி பேரிடர் மேலாண்மை தொடர்பான குழுவை நியமித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தலைமையிலான எட்டு உறுப்பினர்களை கொண்டுள்ளது.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri