திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கான குழுத்தலைவர் நியமனம்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினுடைய தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராசா தனராஜ் என்பவரை அக்கட்சி பிரேரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.06.2025) மாலை அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு
இதன்போது குறித்த தெரிவானது அக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் தலைவர் சண்முகம் குகதாசன் மற்றும் கிளையின் செயலாளர் கந்தசாமி செல்வராசா ஆகியோர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிடையே ஜனநாயக முறையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு துரைராசா தனராஜ் என்பவர் உறுப்பினர்களினால் அவர்களது குழுத்தலைவராக முன்மொழியப்பட்டிருந்தார்.
குறித்த பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவும் கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
