ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது: வாசுதேவ
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது எனவும் அறிந்துக்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் ஆணைக்குழு கண்டறியவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் வாசுதேவ இதனை கூறியுள்ளார்.
இது குறித்து யாரும் என்னிடம் கேட்கவில்லை. நீங்கள் தான் முதலில் கேட்கின்றீர்கள். இது முழுமையற்ற அறிக்கை. அறிந்துக்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அதில் இல்லை.
ஈஸ்டர் தாக்குதலுடன் மிகப் பெரிய கலவரம் ஏற்படவிருந்தது.
இந்த கலவரம் ஏற்பட்டிருந்தால், நாட்டில் நடத்தப்படவிருந்த தேர்தலை நடத்தமால் தவிர்க்க இந்த சிவில் கலவரம் திட்டமிடப்பட்டிருந்ததா?. எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திட அது திட்டமிடப்பட்டிருந்ததா?. இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் விசாரிக்க வேண்டும்.
அப்படியில்லை என்றால், சஹ்ரானுக்கு ஏனையோருக்கும் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தும் தேவை இருந்திருக்க வேண்டும். அவர்களின் தேவை அது மட்டுமே. நாட்டு கத்தோலிக்க சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பாரிய கலவரம் ஏற்பட்டு, அது எங்கு போய் முடியும் என்பது சஹ்ரானுக்கு தெரியாது.
சஹ்ரானுக்கு அது அவசியமும் இல்லை. ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
