காலிமுகத்திடல் சம்பவம்:ஐக்கிய நாடுகள் சபை கவலை
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு போராட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உரிமை உண்டு. அவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Gravely concerned by use of force to disperse protestors.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) July 22, 2022
Journalists and human rights defenders have a right to monitor demonstrations and their functions should not be impeded. pic.twitter.com/iqcXvzNtEC
நாட்டில் ஏறபடக்கூடிய பிரச்சினைகள்
இந்த பதிவில்,காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கலைக்க தாக்குதல்களை மேற்கொள்வது குறித்து ஐ.நா வேதனையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைதியான போராட்டங்களை நடத்தும் உரிமையையை நசுக்க முயற்சிப்பதன் மூலம் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை மேலும் மோசமடையக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
