படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெனான்டோவின் நினைவேந்தல்
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளரின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
புனித மரியாள் தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் இன்று வியாழக்கிழமை (6) உறவினர்கள் மற்றும் மக்கள் ஒன்று இணைந்து ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
1988ஆம் ஆண்டு யூன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் சமாதி புனித மரியாள் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அவரின் 36வது தினத்தையிட்டு மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று அன்னாரது சமாதியில் நினைவேந்தல் இடம்பெற்றது இதில் சர்வமத தலைவர்கள், வனபிதாக்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னரின் ஆத்மசாந்தி வேண்டி அவரின் சமாதியில் உள்ள திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி விசேட பிராத்தனையுடன் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
