அரச உத்தியோகஸ்தர்கள் குருதிக்கொடை வழங்க முன்வர வேண்டும்: யாழ். அரச அதிபர் அழைப்பு (Photos)
யாழ்ப்பாணத்தில் உள்ள அரச உத்தியோகஸ்தர்கள் பொதுமக்களுக்கு மனிதாபிமான முறையில் குருதிக்கொடையை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என யாழ். அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன் அழைப்பு விடுத்துள்ளார்.
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சங்கத்தால், அரச உத்தியோகஸ்தர்களுக்கான வினைத்திறன் தடைகாண் பரீட்சைக்கான வழிகாட்டல் செயலமர்வு, நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் (25.02.2023) நடைபெற்றுள்ளது.
இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சேவை
மேலும் அரச அதிபர் உரையாற்றுகையில், அரச உத்தியோகஸ்தர்கள் அலுவலக நேரங்களில் மக்கள் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகங்களில் வீண் பொழுது போக்குகின்றார்கள் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஏற்படக் கூடாது.
அலுவலகத்திற்கு வருகின்ற வயோதிபர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். அரச பணிக்கு வருகின்ற அனைவரும் ஏதோ ஒரு துறையில் படித்தவர்கள். அவர்கள் பண்பாகச் செயற்பட வேண்டும். பொதுமக்கள் மனங்களில் இடம்பிடிக்கத் தக்க செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
குருதிக்குத் தட்டுப்பாடு
யாழ்.மாவட்டத்தில் குருதிக்குத் தட்டுப்பாடு உள்ளது. இதனால் நாம் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படக் கூடாது. யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகஸ்தர்கள் குருதிக்கொடை செய்வதற்கு முன்வர வேண்டும். வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சங்கம் இப்பணியை மேற்கொள்ள வேண்டும். மக்கள் சேவை மகேசன் சேவையென வாய் வழியாகக் கூறிவிட்டு இருக்காமல் அதைச் செயலில் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலமர்வில் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சங்கத்தின் பிரதிநிதிகள், வளவாளர்கள் போன்றோர் உட்பட நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
