மொனராகலையில் பாடசாலை மாணவிகள் இருவர் மாயம்
மொனராகலை - வெல்லவாய, கொட்டவெஹெரகலய பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
பதினைந்து வயதுடைய இரண்டு மாணவிகள் நேற்று (15) முதல் காணாமல்போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இந்த இரு மாணவிகளில் ஒருவர் கொட்டவெஹெரகலய பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அதே கிராமத்தில் வசிக்கும் அவரது நண்பி நேற்று முன்தினம் (14) மாலை அவரது வீட்டிற்கு கல்வி கற்பதற்காக வந்துள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலை இரண்டு பேரையும் வீட்டில் காணவில்லை என வீட்டின் உரிமையாளர் வெல்லவாய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய, மாணவிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri