கொழும்பில் நிதி அமைச்சை நோக்கி பாரிய ஆர்ப்பாட்டம்! முன்னேற முற்படும் போராட்டக்காரர்கள் - தயார் நிலையில் பொலிஸார்(Video)
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கத்தினர் இணைந்து தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதியமைச்சினை நோக்கிச் செல்லும் லோட்டஸ் வீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தயார் நிலையில் பொலிஸார்
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச சேவையாளர்களின் கொடுப்பனவுகளை முறையாகச் செலுத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பேரணியாக நிதி அமைச்சை நோக்கி செல்ல முற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நீர்த்தாரைப் பிரயோக வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதுடன் களத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.











அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri