இலங்கை துறைமுக அதிகார சபை வெளியிட்ட அறிவிப்பு
2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு 13.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) தெரிவித்துள்ளது.
2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான ஒட்டுமொத்த கொள்கலன் கையாளல் அளவு, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 2.56 மில்லியன் சமமான அலகுகளுடன் ஒப்பிடுகையில், 2.91 மில்லியனுக்கும் அதிகமான சமமான அலகுகளை எட்டியுள்ளது.
இரண்டாம் கட்டப் பணிகளுக்காக
ஏப்ரல் மாதத்தில் மட்டும், துறைமுகம் 761,096 சமமான அலகுகளைக் கையாண்டுள்ளது, இது ஏப்ரல் 2025ஐ விட 22 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகம் முக்கியமாக ஒரு சரக்கு மாற்றுத் துறைமுகமாகச் செயல்படுகிறது என்றும், அதன் மொத்த நடவடிக்கைகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சரக்கு மாற்று ஏற்றுமதியே என்றும் இலங்கை துறைமுக அதிகார சபை(SLPA) தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள மேற்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விருப்ப வெளிப்பாடுகளைக் கோருவதற்கு துறைமுக அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட இந்த விரிவாக்கமானது, துறைமுகத்தின் ஆண்டு கையாளும் திறனுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சமமான அலகுகளைச் சேர்ப்பதோடு, கிழக்கு - மேற்கு கடல்வழி வர்த்தகப் பாதையில் கொழும்பின் நிலையையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.