இலங்கையை காப்பாற்ற புதிய முயற்சி: பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர்
கொழும்பு துறைமுகம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை திட்டங்களுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் டுபாயில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதலீட்டு ஊக்குவிப்பு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் டுபாய் மற்றும் அபுதாபியில் இரண்டு நாள் பிரச்சார செயற்திட்டம் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம்
இதற்கு நிபுணத்துவ ஆதரவை வழங்கும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இலங்கை நாணயத்தில் 697,00000 ரூபா ( 2,10000 அமெரிக்க டொலர்) வழங்கப்பட உள்ளது.

கொழும்பு துறைமுகத்தை கட்டுப்படுத்தும் சீன நிறுவனமான Check Port City Private Limited மூலம் அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri