கொழும்பில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து விபத்து! பலர் பலி! மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் (VIDEO)
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பேருந்து நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா சென்ற மாணவர்களின் நிலைமை தொடர்பில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் வந்த பேருந்து விபத்துக்குள்ளானது.பாடசாலை மாணவர்களுக்கு பெரிய காயம் எதுவுமில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம். சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாங்கள் வைத்தியசாலைக்கு போகின்றோம்.யாரும் தொலைப்பேசி அழைப்பினை மேற்கொள்ள வேண்டாம். மாணவர்களின் நிலைமை தொடர்பில் பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கர விபத்தினால் வானில் வந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்த விபத்தில் மேலும் 51 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri