கொழும்பில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து விபத்து! பலர் பலி! மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் (VIDEO)
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பேருந்து நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா சென்ற மாணவர்களின் நிலைமை தொடர்பில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் வந்த பேருந்து விபத்துக்குள்ளானது.பாடசாலை மாணவர்களுக்கு பெரிய காயம் எதுவுமில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம். சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாங்கள் வைத்தியசாலைக்கு போகின்றோம்.யாரும் தொலைப்பேசி அழைப்பினை மேற்கொள்ள வேண்டாம். மாணவர்களின் நிலைமை தொடர்பில் பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கர விபத்தினால் வானில் வந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்த விபத்தில் மேலும் 51 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri
