கொழும்பில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து விபத்து! பலர் பலி! மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் (VIDEO)
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பேருந்து நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா சென்ற மாணவர்களின் நிலைமை தொடர்பில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் வந்த பேருந்து விபத்துக்குள்ளானது.பாடசாலை மாணவர்களுக்கு பெரிய காயம் எதுவுமில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம். சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாங்கள் வைத்தியசாலைக்கு போகின்றோம்.யாரும் தொலைப்பேசி அழைப்பினை மேற்கொள்ள வேண்டாம். மாணவர்களின் நிலைமை தொடர்பில் பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கர விபத்தினால் வானில் வந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்த விபத்தில் மேலும் 51 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri