கொழும்பு நெடுஞ்சாலையில் நடந்த சம்பவம்: இளைஞனை கொலை செய்ய முயற்சியா என விசாரணை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதுரிகிரிய மற்றும் கொட்டாவை மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞன் வீதியில் பயணித்த வாகனத்தில் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் உயிரை மாய்க்கும் நோக்கில் நெடுஞ்சாலையில் குதித்தாரா அல்லது வேறு தரப்பினர் குறித்த இளைஞனை பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் தள்ளினார்களா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
அதுருகிரியவில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனே விபத்தில் சிக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)