தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம்

Sri Lanka Police Colombo Galle Gun Shooting
By Dhayani Mar 13, 2024 02:43 AM GMT
Report

அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உத்தரவின் பேரில் இரு வாடகை கொலையாளிகளால் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு : வெளியான தகவல்

தென்னிலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு : வெளியான தகவல்


இந்த இரண்டு தாக்குதல்களும் T-56 ஆயுதத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டதுடன், இரண்டு தாக்குதல்களிலும் ஒரே கொலையாளிகள் ஈடுபட்டுள்ளதாக சிசிடிவி காணொளி காட்சிகள் மூலம் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம் | Colombo Gun Shooting Investigation

இந்த தாக்குதலின் பின்னர், வாடகைக் கொலையாளிகள் 25 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து அம்பலாங்கொட பிரதேசத்திற்கு வந்து, இரவு 9.30 மணியளவில் தமது இரண்டாவது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்


வெளியான காரணம்

எவ்வாறாயினும், இரவு வேளைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால், சிசிடிவி காணொளி காட்சிகளும் தெளிவாக தெரியவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வரும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் போதைப்பொருள் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம் | Colombo Gun Shooting Investigation

மேலும், பிடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம், நபர் ஒருவரை கொலை செய்தமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும் 4 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 6 பேர் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிடிகல - குருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம் | Colombo Gun Shooting Investigation

பொலிஸார் விசாரணை

இந்த நிலையில் அவர்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்திருந்ததுடன்,  அவர் வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வந்திருந்த ஒருவரென தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம் | Colombo Gun Shooting Investigation

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஊழியரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரின் 21 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு

யாழில் கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு

ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்: பெண் உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு

ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்: பெண் உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US