துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அரசியல்வாதியின் வீட்டில் சோதனை
மாத்தறை - பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த அரசியல்வாதியின் குருநாகல் இல்லம் பொலிஸாரின் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்திருந்ததுடன், ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் சட்டவிரோத பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
குறித்த வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
