அதிகாலையில் விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து! சாரதியின் சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியில் இன்று (26) அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சாரதி மற்றும் நடத்துனரின் செயற்பாடு
பேருந்து வளைவில் செல்ல முயன்றபோது, சாரதி பேருந்தை கட்டுப்படுத்த இரண்டாவது "கியர்" (Gear) மாற்றியதாகவும், அந்த நேரத்தில், பேருந்தின் தடை ( பிரேக்) செயலிழந்ததை உடனடியாக உணர்ந்து பேருந்தை மண் மேட்டில் மோத வைத்து பேருந்தினை நிறுத்தி பயணிகளுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து பயணிகளை காப்பாற்றியுள்ளார்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் இருந்துள்ளதுடன்,மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் (49) என்பவர் உடனடியாக செயற்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் பயணிகளை வேறு பேருந்திற்கு மாற்றி பாதுகாப்பாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விபத்து குறித்து கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல், புகைப்படங்கள் - திவா







உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam