கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார் (Video)
வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த செயற்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி மக்களின் கையெடுத்துகளை திரட்டும் நடவடிக்கையும், துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.







அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri