கொழும்பில் பெருந்தொகை அமெரிக்க டொலர்கள் கொள்ளை
பொரலஸ்கமுவ - கட்டுவல மாவத்தை வீடொன்றில் நுழைந்த நபர் ஒருவர், பணிப்பெண் மீது கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (12.06.2023) மதியம் 1.30 மணியளவில் குறித்த வீட்டிற்குள் நுழைந்த நபர் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அங்கு 10,707,800 ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்கள், 55 லட்சம் ரூபாய் இலங்கை நாணயங்கள் மற்றும் தங்கப் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வீட்டின் உரிமையாளரான கணவர் துறைமுக அதிகாரசபையிலும் மனைவி வங்கி முகாமையாளராகவும் பணிபுரிவதால் வீட்டில் பணிப்பெண் ஒருவரும் இருந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
மேலும் 12 நாட்களுக்கு முன்பு அந்த வீட்டிற்கு வந்த பணிப்பெண்ணின் கணவரும் 10 வயது மகனும் சம்பவம் தினத்தன்று வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவம் தினத்தன்று பணிப்பெண் தனது கணவரையும், பிள்ளையையும் கிராமத்திற்கு அனுப்பி வைப்பதற்காக மகரகமவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மதியம் பணிப்பெண் தனியாக வீடு திரும்பிய நிலையில் பின்பக்க கதவை திறந்த போது பின்னால் வந்த நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, வீட்டுக்குள் அழைத்துச் சென்று பணிப்பெண்ணின், கைகளை கட்டி வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் News Lankasri

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri
