மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 12 மையங்களில் அன்டிஜன் சோதனை - சுகாதார அதிகாரிகள் மீது முறைப்பாடு
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மக்கள் மத்தியில் 12 மையங்களில் அன்டிஜன் சோதனைகள் நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் சுகாதார அதிகாரிகள் பிரசன்னமாகவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.
இது குறித்து முறையாக அறிவிக்கப்படாததால் சுகாதார அதிகாரிகள் குறித்த இடங்களில் பிரசன்னமாக தயக்கம் காட்டினார், அவர்களுக்கு அம்புலன்ஸ்(அவசர சேவை வாகனங்கள்) வசதிகள் வழங்கப்படவில்லை என்றும், முறையிடப்பட்டுள்ளது.
கொச்சிக்கடையில் உள்ள தொப்புவா பாலம், நிட்டம்புவையில் உள்ள ஹெலகல்லா சந்தி, ஹன்வெல்லவில் வாகக்கோடா பாலம் போன்ற இடங்களில் சுகாதார அதிகாரிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை .
இன்று மதியம் 12.00 மணி முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் மீது மேல் மாகாணத்திலிருந்து 12 நுழைவு மற்றும் வெளியேறும் மையங்களில் என்டிஜன் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
மேல் மாகாண சுகாதாரத் துறை செயலாளர் காமினி தர்மசேனாவைத் தொடர்பு கொண்டபோது,
சில வெளியேறும் இடங்களில் சுகாதார அதிகாரிகள் இல்லையா என்பது குறித்து
தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.