மக்களின் பயன்பாட்டிற்கு வரும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்
புனரமைக்கப்பட்ட கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று(08) மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறக்கப்படுகின்றது.
ஏற்கனவே உள்ள கட்டிடங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகளின் வசதிக்காக புதிய தகவல் மையம் (Information Centre) ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
நவீன வசதிகள்
பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு முறையான சுகாதார மற்றும் மலசலகூட வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
பேருந்துகளுக்கென பிரத்தியேகமான வெளிப்புற வரிசை முறை (Queuing area) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது பேருந்து நிலையத்தின் சூழலை அழகுபடுத்துவதுடன், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.



















அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam