கொழும்பில் தனியார் பேருந்து விபத்து: பயணிகள் சிலர் காயம்
கொழும்பு - ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது இன்று (30.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மத்துகமவில் இருந்து சிறீ ஜயவர்தனபுர நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேருந்து திடீரென சீமெந்து தடுப்பொன்றில் மோதிய போது ஏற்பட்ட அதிர்வில் பேருந்தில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
