கொழும்பு - அக்கரைப்பற்று பேருந்தில் போதைப் பொருள் கடத்தல்: 20 வயது இளைஞர் கைது!
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் தனியார் பேருந்து வண்டியில் அனுப்பப்பட்ட சிசிடிவி கேமரா பொதியுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26.03.2026) இடம்பெற்றது.
மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கும் இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில் சிசிடிவி கேமரா பொதியொன்றை, தொலைபேசி மற்றும் பெறுநர் விவரங்களுடன் நடத்துனரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
20 வயது நபர் கைது
இந்த கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழு சம்பவ தினமான நேற்று(26) அதிகாலை 3 மணியளவில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

பேருந்து அக்கரைப்பற்றை வந்தடைந்த போது, நடத்துனர் பொதியிலுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட சிசிடிவி கேமராவை எடுத்துச் செல்லுமாறு தெரிவித்தார்.
இதையடுத்து, பேருந்து நிலையத்தில் பொதியை எடுத்துக் கொண்ட நபரை மறைந்திருந்த பொலிஸார் சந்தேகநபராகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 20 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri