மகிந்தவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வசூல் வேட்டை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று பாலூட்டும் தாய்மாருக்கு தானம் வழங்குதல் மற்றும் ஆசி வழங்கும் பிரித் ஓதல் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அமைச்சர்களிடம் இரண்டு லட்சம் ரூபா வசூல்

இந்த நிகழ்ச்சிக்காக மொட்டுக்கட்சியை சேர்ந்த அமை்சசரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிடம் தலா இரண்டு லட்சம் ரூபாவும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களிடம் தலா ஒரு லட்சம் ரூபாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புண்ணியதானத்திற்கு தேவையான பொருட்களை வழங்கும் பொறுப்பு மாகாண மற்றும் பிரதேச சபை மட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நிகழ்வு சம்பந்தமாக கடந்த வாரம் மொட்டுக்கட்சியின் 60 உயர் மட்டப்பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அந்த கூட்டத்தில் 30 பேர் மட்டுமே கலந்துக்கொண்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஏனையோர் பணத்தை அனுப்பி வைத்திருந்தாக கூறப்படுகிறது.
பிறந்த தின நிகழ்வை மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் பிரபல முன்னாள் அமைச்சர் உட்பட சிலர் ஏற்பாடு செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri