பாம்புகளை பிடிக்கும் நபர் பாம்பு தீண்டி மரணம்
பிடிக்கப்பட்ட நாக பாம்பை காட்டுக்குள் கொண்டு சென்று விடாது தோளில் போட்டுக்கொண்டு காட்சிப்படுத்திய பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அம்பலாங்கொடை அக்குரல பிரதேசத்தில் நடந்துள்ளது. சம்பவத்தில் சுதத் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாம்பை பிடித்து தோளில் போட்டுக்கொண்டு செய்த காரியம்
அக்குரல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த நாக பாம்பை இந்த நபர் பிடித்துள்ளார். பிடித்த பாம்பை தோளில் போட்டுக்கொண்டு பாம்பின் இருமுனைகளிலும் பிடித்து அங்கும், இங்கும் இழுத்த போதே அந்த பாம்பு தீண்டியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பு தீண்டிய நபர் முதலில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன் பல பாம்புகளை பிடித்து காட்டில் விட்டார்
பாம்பு தீண்டி மரணமடைந்த இந்த நபர் இதற்கு முன்னர் பல பாம்புகளை பிடித்து காட்டில் விட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
