கொழும்பு கரையோர தொடருந்து சேவை பாதிப்பு - பொதுமக்களுக்கு அறிவிப்பு
மருதானையில் (Maradana) இருந்து களுத்துறை (Kalutara) நோக்கிப் பயணித்த தொடருந்து தடம்புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (13.4.2024) காலை களுத்துறை தெற்கு தொடருந்து (Railway) நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
தொடருந்துகளை இயக்குவதில் தாமதம்
இதன்காரணமாக, கரையோர மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என திணைக்களம் (Department of Railways) குறிப்பிட்டுள்ளது.
குறித்த தொடருந்து வழித்தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொடருந்து திணைக்களம் (Department of Railways) குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |