கிளப் வசந்த கொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
கிளப் வசந்த கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைதான 17 பேரில் பெண் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் கடந்த 23 ஆம் திகதியும் மற்றைய நபர் நேற்றும் (28) பாணந்துறை - பிங்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளப் வசந்த இலக்கு
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காரின் சாரதியும் பிங்வத்த பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கிளப் வசந்தவை இலக்கு வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
