திருகோணமலை பொது வைத்தியசாலையில் கிளினிக் நோயாளர்கள் அவதி
திருகோணமலை பொது வைத்தியசாலையில் மாதாந்த பொது கிளினிக் நோயாளர்களுக்குத் திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு ஒரே ஒரு வைத்தியர் கடமையில் இருப்பதாகவும் இதனால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்துகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை கிழக்கு மாகாண சபையின் கீழ் செயற்பட்டு வந்த காலகட்டத்தில் வைத்தியர்கள் அதிகளவில் கடமையிலிருந்தனர்.
ஆனாலும் தற்போது மத்திய அரசாங்கத்திற்குக் கீழ் உள் வாங்கப்பட்டிருந்தபோதிலும் வைத்தியர்கள் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
பொது கிளினிக் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காகக் காலை 7 மணிக்கு வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த போதிலும் மூன்று மணி வரைக்கும் ஒரே ஒரு வைத்தியர் கடமையிலிருந்ததாகவும் நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாகத் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்திடம் நோயாளர்கள் சென்று முறையிட்ட போதிலும் நோயாளர்களின் பேச்சி செவிமடுக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆகவே இனிவரும் காலங்களிலாவது நோயாளர்களின் நலன் கருதி நோயாளர்களின் வருகை
தொகையைக் கவனத்தில் கொண்டு வைத்தியர்களை மேலதிகமாக நியமிக்க வேண்டும் எனவும்
நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
