காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்
காலநிலை ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சூரியனின் இயக்கம்
இதேவேளை அனுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி,நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூரியன் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.