நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா

Mannar Trincomalee Anura Kumara Dissanayaka Clean Sri lanka
By Kiyas Shafe May 23, 2026 09:13 PM GMT
Report

ஜனாதிபதியின் உன்னதமான கருத்தியலுக்கு அமைவாக, "க்ளீன் ஸ்ரீலங்கா" (Clean Sri Lanka) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், “தூய்மையான கடற்கரை - கவரும் சுற்றுலாத் தலம்” என்ற தேசிய கருப்பொருளின் கீழ் நாட்டைச் சூழவுள்ள 253 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு இணையாக, திருகோணமலை பொதுக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் வேலை திட்டம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. பி. எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றது.

இலங்கை ராணுவத்தினரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 22 வது காலாட்படைப் பிரிவின் தளபதி - மேஜர் ஜெனரல் W.B.M.K.G.K. வீரசேகர, 223 வது காலாட்படைப் பிரிவின் சார்பாக, கஜபா ரெஜிமெண்ட்டின் 22 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி கேணல் (Colonel) டி. ஏ. ஆர். கே. தென்னகோன், கோப்ரல் (Corporal) W.M.வீரரத்ன, அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். 

கிளிநொச்சி 

தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 7 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (23) மாவட்ட அரசாங்க அதிபர்  S.முரளிதரன் அவர்களும் 55 படைபிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் இனோச் கேரத் அகியோர்களின் தலைமையில் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் விநாசியோடை கெளதாரிமுனை கடற்கரையில் காலை 8.30 மணிக்கு இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா | Clean Sri Lanka Phase 2

”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.

இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், கண்ணாடியிலான கழிவுப் பொருட்கள், இலகுவில் அழிந்து போகக்ககூடிய கழிவுப் பொருட்கள் என ஏராளமான கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டுள்ளதோடு தொடர்ந்துவரும் காலங்களிலும் நிலைபேறான தூய்மையாக்கலை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்தொழில் சார்ந்த அமைப்புகள்,அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ், முப்படையினர்,பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியினை முன்னெடுத்தனர்.

நான் முட்டாள் அல்ல..! தன்னை இப்படி அழைக்குமாறு கூறிய ட்ரம்ப்..

நான் முட்டாள் அல்ல..! தன்னை இப்படி அழைக்குமாறு கூறிய ட்ரம்ப்..

மேலதிக தகவல் - தேவந்தன்

 ஊறணி கடற்கரை

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் பணி இன்றைய தினம் ஊறணி கடற்கரையில் இடம் பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா | Clean Sri Lanka Phase 2

எல்லங்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற குறித்த கிளீன் ஸ்ரீலங்கா கரையோர தூய்மையாக்கும் பணியில் எல்ங்குளம் படை முகாம் ராணுவ அதிகாரிகள், உதவி போலீஸ் அத்தியட்சகர், வல்வெட்டித்துறை போலீசார் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராஜா திருலிங்கநாதன் உதவி பிரதேச செயலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் நலன் விரும்பிகள் மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

மாமனை கடற்கரை

சுத்தமான கடற்கரை, கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்காக கிளீன் srilanka திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மாமனை கடற்கரை பகுதி சுத்தப்படுத்தும் பணி இடம்பெற்றது.

இதில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், கண்ணாடியிலான கழிவுப் பொருட்கள், இலகுவில் அழிந்து போகக்ககூடிய கழிவுப் பொருட்களென அதிகளவான கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டன.

 வேலை திட்டத்தில் இராணுவத்தினர், செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் அடிகளார், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர் மாமுனை கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள், மருதங்கேணி போலீசார் என பலரும் கலந்து கொண்டனர்

மேலதிக தகவல் - எரிமலை

மன்னார்

அழகிய தீவு புன்னகைக்கும் மக்கள் எனும் கருப்பொருளில் கிளீன் சிறிலங்கா (Clean Sri Lanka) நிகழ்ச்சித் திட்டம் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா | Clean Sri Lanka Phase 2

அதற்கு அமைவாக முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரிப்பு அல்லிராணி கோட்டை சார்ந்த பகுதிகளில் விசேட நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத்தின் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் 542 வது படைப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் ரிதிமாலியத்த தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் உற்பட திணைக்கள தலைவர்கள்,இராணுவத்தினர் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்,கழிவு பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

என்.பி.பி. அரசின் வாக்குறுதிகள் வெறும் தேர்தல் விளம்பரங்களே! நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ கண்டனம்

என்.பி.பி. அரசின் வாக்குறுதிகள் வெறும் தேர்தல் விளம்பரங்களே! நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ கண்டனம்

மேலதிக தகவல்- ஆசிக்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US