ரக்பி லீக் போட்டியின் போது பெண் ஒருவரால் ஏற்பட்ட பதற்றமான சூழல்
வெலிசர மைதானத்தில் இடம்பெற்ற ரக்பி லீக் போட்டியின் போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் கண்டி எஸ்சி அணிகளுக்கு இடையிலான கழக போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்படைக்கு ஆதரவான பெண் பார்வையாளர் ஒருவர் எதிர் அணியில் உள்ள ஒருவர் தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த மைதானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தாக்கிய பெண் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதை அந்த வீடியோவில் காண முடிந்துள்ளது.
அந்த பெண் அங்கிருந்து சென்றதன் பின்னர் போட்டி தொடர்ந்தது.
இந்த போட்டியில் கண்டி எஸ்சி அணி 37-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.