பொது நிதிக் குழுவின் தலைவர் பதவிக்காக மோதல்: ஏற்படுத்தியுள்ள புதிய திருப்பம்
நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கான மோதல், புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவை, பொது நிதிக் குழுவுக்கு தற்காலிக தலைவராக நியமித்த நிலையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய நியமனம், நிலையியற் கட்டளைகளை மீறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிதிக் குழுவின் தலைவர் பதவி
தற்காலிக அடிப்படையில் தலைவர் நியமனம் என்பது, குழுவை பொறுத்த வரை நடைமுறையில் இல்லை என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
வஜிர அபேவர்தனவை பொது நிதிக் குழுவின் தலைவராக நியமித்தமை நிலையியற் கட்டளைகளை மீறும் செயலாகும்.
இறுதி முடிவு
குழுவுக்கான தலைவர் எதிர்க்கட்சியில் இருந்து வர வேண்டும். கூறப்பட்ட உத்தரவுகளின்படி அந்த பதவிக்கு பதில் தலைவர் ஒருவரை நியமிக்க எந்த ஏற்பாடும் இல்லை என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிதிக்குழு தலைவர் பதவி தொடர்பான இறுதி முடிவு 2023 மார்ச் 7ஆம் திகதி எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
