யாழில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் 7 கோயில்களுக்கு செல்ல அனுமதி
யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் ஏழு கோயில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகத்திற்கு அருகாமையில் காணப்படும் ஏழு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்ய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோயில்களின் விபரம்
கடுவான் முத்துமாரியம்மன் கோயில், விசாவிலன் சிவன் கோயில், வாசவிலன் நாக கோயில், வாசவிலன் மனம்பிறய் கோயில், பளை ராஜராஜேஸ்வரி கோயில், பளை நாக தம்பிலான் கோயில், பளை சக்திவேல் முருகன் ஆலயம் என்பனவற்றில் வாராந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில்களின் அறங்காவலர்களினால் விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில்களில் மாதாந்த மற்றும் விசேட பூஜை வழிபாடுகளுக்கு மட்டுமே முன்னதாக அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam