திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை சிப்பாய்
சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் கடமையில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
பொலன்னறுவை - கந்தேகமவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படைப பிரிவில் கடமையாற்றி வந்த சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் ஆயுத களஞ்சியத்திற்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிப்பாயின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.