கோவிட் காலத்தில் அரச ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் சிறப்பு சுற்றுநிருபம் வெளியீடு
தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடைமுறை தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்கள், வாரத்திற்கு இரண்டு வேலை நாட்கள், தங்களின் விடுமுறை நாட்களில் கழிக்கப்படாமல், சேவைக்கு சமுகமளிக்காதிருக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர் ஒருவருக்கு, மாதத்தில் சேவைக்கு சமூகமளிக்காதிருப்பதற்கான உச்சப்பட்ட கால எல்லையை, எட்டு நாட்களுக்கு மேலாக அதிகரிக்க கூடாது.
தமது நிறுவனத்திற்கு மிகவும் பொருத்தமான முறையில், அவரை சேவைக்கு அழைக்காதிருப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.



போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
