மசாலாப் பொருட்களின் விலை ஆயிரக்கணக்கில் உயர்வு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தினம் தினம் விலைவாசி அதிகரிப்பை எதிர்நோக்கும் மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்துள்ளனர்.
மசாலாப் பொருட்களின் விலையும் அதிகரித்தது
இந்த நிலையில் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களின் விலைகளும் சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளன.
கறுவா, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஏற்றுமதி மட்டத்தில் உள்ள ஒரு கிலோ இலவங்கப்பட்டையின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு கிலோ மிளகு 1300 ரூபாவாகவும், கராம்பு கிலோ ஒன்றின் விலை 2400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.